பெண்களுக்கான இலவச கேஸ் இணைப்பு திட்டம் Pradhan Mantri Ujjwala Yojana

பெண்களுக்கான இலவச கேஸ் இணைப்பு திட்டம் Pradhan Mantri Ujjwala Yojana

*திட்டத்தின் நோக்கம்* 

01. தகுதி உள்ள குடும்ப பெண்கள் அனைவருக்கும் இலவச கேஸ்.
02. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது.
03. விறகு அடுப்பு உள்ள பெண்களின் சுமைகளை குறைப்பதற்கு.


*திட்டத்திற்கான தகுதி* 

01. இத்திட்டத்தை பெண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். 
02. பெண்கள் இந்திய குடியுரிமையை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
03. 18 வயது நிரம்பியராக இருக்க வேண்டும். 
04. முன்பு எந்த விதமான கேஸ் இணைப்பும் அவர்கள் வீட்டில் இருக்கக் கூடாது. 

*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்* 

01. சம்பந்தப்பட்ட பெண் பயனாளியின் ஆதார் கார்டு 
02. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அனைவரின் ஆதார் கார்டு 
03. ரேஷன் கார்டு ( வறுமை கோடு கீழ் )
04. அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 
05. ஜாதி சான்றிதழ் 
06. முகவரி சான்றிதழ் ( Voter ID / Licence) 
07. வங்கி கணக்கு ( Passbook Front Page Xerox ) 

*திட்டத்திற்கு திட்டம் எடுக்கும் முறை* 

உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கேஸ் ஏஜென்சி மூலம் எடுக்கலாம். 
( அல்லது ) www.pmuy.gov.in என்ற என்ற இணையதளத்தில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ( அல்லது ) 
உங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 

குறிப்பு: உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொண்டால் மானிய கேஸ் அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் இணைப்புகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.