கார்பினி பெண்கள் பிரசவத்திற்குப் பின் ஓமத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பிரசவத்திற்குப் பிறகு ஓமத் தண்ணீர் குடிப்பது தாயின் உடல் நலமும் புத்துணர்ச்சியும் மேம்பட உதவுகிறது. இது ஜீரணத்தை மேம்படுத்தி, உடல் எடையை கட்டுப்படுத்தும் இயற்கையான நன்மை உடையது.
பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று வாய்வு. ஓமம் வாயுவை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
பிரசவத்துக்குப் பின் பெண்கள் ஓமம் நீரைப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இதனால் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் கொடுக்க முடியும்.
பிரசவத்தின் போது உடல் பல பகுதிகளிலும் வலி ஏற்படும். ஓமம் இயற்கையான வலி நிவாரணியாக செயல்பட்டு வலியைப் போக்கும்.
ஓமத்தில் உள்ள ஆன்டிசெப்டிக் குணங்கள் காரணமாக, இது சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான தொற்றுநோய்களைத் தடுக்க உதவும்.
ஓமம் நீர் உடல் மற்றும் மூட்டு வலிகளை குறைக்க உதவுகிறது. பிரசவத்திற்குப் பின் பெண்கள் அனுபவிக்கும் கடும் வலிகளையும் இது தணிக்கிறது. இயற்கை நன்மை கொண்ட இந்த நீர் உடல் நலனை மேம்படுத்துகிறது.
பிரசவத்திற்குப் பின் பெண்களின் எலும்புகள் பலவீனமடையலாம். ஓமம் எலும்புகளை வலுப்படுத்தி, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பிரசவத்திற்குப் பின் உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்களுக்கு ஓமம் உதவலாம். இது செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவும்.
பிரசவத்திற்குப் பின் எந்த ஒரு புதிய உணவுப் பொருளையும் உட்கொள்வதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது